அரசாங்க சொத்துக்கள் பற்றிய முறையான தணிக்கை இன்றுவரை நடத்தப்படவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.எம்.சி. விக்கிரமரத்ன கொழும்பில் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
கணக்காய்வாளர் நாயம் மேலும் தெரிவிக்கையில்,
அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்யாததால் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கணக்கியல் பணிகளை அரசு அதிகாரிகள் தாங்களாகவே செய்கின்றனர். அப்படியானால் அவை அனைத்தும் ஒரே இடத்தில் ஏன் இல்லை?
குறைந்தபட்சம் அரசு வாகனங்களின் எண்ணிக்கையை என்னிடம் சொல்ல முடியுமா? ஏன் என்றால் தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அவை இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.
எங்கள் சமீபத்திய தணிக்கை அறிக்கைகளில் அதிக அளவு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு நிறுவனங்களுக்கு வாகனங்கள் இல்லை. “நாங்கள் மிகவும் எளிமையான முறையிலேயே சரிபார்த்தோம்.” என்றார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!