கனடா,சீனா, மெக்ஸிக்கோ ஆகியமூன்று நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள அதிகரித்த வரி விதிப்பை ஐரோப்பிய ஆணையம் ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளது.
” அதிகரித்த வரி விதிப்பு தேவையற்ற பொருளாதார சீர்குலைவை உருவாக்குகின்ற. பணவீக்கத்தை தூண்டுகின்றன. அவை அனைத்து தரப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” ஐரோப்பிய பொருட்கள் மீது நியாயமற்ற அல்லது தன்னிச்சையாக வரிகளை விதிக்கும் எந்தவொரு வர்த்தக கூட்டாளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக பதிலளிக்கும்.
“அமெரிக்காவுடனான நமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவு உலகிலேயே மிகப் பெரியது. நிறைய ஆபத்தில் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!