ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்காவுக்குப் பயணிப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 24ஆம் திகதி அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 இற்கு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ளார்.