வடமாகாணத்தின் மன்னார்,பூனேரி ஆகிய இடங்களில் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையத் திட்டத்திற்கு இந்தியாவின் அதானி குழுமம் வழங்கிய விலைகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அதானி திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, திட்டம் இடைநிறுத்தப்படவில்லை, ஆனால் இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் விலையில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதானி குழுமத்தின் உத்தேச விலைகளை இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றியமைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் இது தொடர்பான மீளாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இத்திட்டம் தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
Trending
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்
- ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை