வெளிநாட்டு இலங்கையர்களுக்கான வாக்களிக்கும் உரிமைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை குடிமக்களின் வாக்களிக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டங்களை ஆய்வு செய்து முன்மொழிய ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய தேர்தல் சட்டம் வெளிநாட்டு குடிமக்கள் வாக்களிப்பதற்கான ஒரு பொறிமுறையை வழங்காததால், இந்த நடவடிக்கை நீண்டகால பிரச்சினையை நிவர்த்தி செய்கிறது. பொது நிர்வாக அமைச்சால் வழிநடத்தப்படும் இந்தக் குழுவில், தேர்தல் ஆணையம், வெளியுறவு அமைச்சு அதிகாரிகலும் பிற முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
கடல்கடந்த வாக்களிப்புக்கான சட்ட கட்டமைப்பை ஏற்கனவே நிறுவியுள்ள இந்தியா, பங்களாதேஷ் , பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுதாரணத்தைப் பின்பற்றி இந்த ஆய்வு நடைபெறுகிறது.