தபால் முத்திரை வருமானம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் முத்திரைக் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கான முன்மொழிவை தபால் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.
மின்சாரம், நீர், எரிபொருள், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட ஏனைய செலவினங்கள் காரணமாகவும்,புதிய தொழில்நுட்பதாலும் தபால் திணைக்களத்தின் வருமானம் குறைந்துள்ளதனால் இந்த யோசனை திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தின் கடிதங்களை வழங்குவதற்கு பொது போக்குவரத்து பயன்படுத்தப்படுவதாகவும், கடந்த காலங்களில் புகையிரத போக்குவரத்து கட்டணங்களும் சுமார் 600% அதிகரித்துள்ளதாக தபால் மா அதிபர்தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக தற்போது கூரியர் சேவை முறையை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் பதற்றம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்