Tuesday, October 14, 2025 10:08 am
வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இன்று காலை யாழ் நூலகத்தை பார்வையிட்டனர்.
வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் நேற்று மாலை இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். சுமார் 30 பேர் வருகை தந்துள்ளதோடு இன்று குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணிக்கின்றனர்.
குடாநாட்டின் கரையோரக் கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளைய தினம் நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


