மியான்மரின் அடுத்த 10 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கான திட்டங்களை இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனவரி 2026 க்குள் வாக்களிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெலாரஸுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின்போது மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்தார். பெப்ரவரி 2021 இல் ஆங் சான் சூகியின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் வெளியேற்றியது.
53 அரசியல் கட்சிகள் ஏற்கனவே தங்கள் பங்கேற்பு பட்டியலை சமர்ப்பித்துள்ளன. ஆனால், சரியான தேர்தல் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ராணுவத் தலைவர் கூறினார்.
சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இருக்க வாய்ப்பில்லாத ஒரு தேர்தல் செயல்முறை மூலம் அதன் ஆட்சியை சட்டப்பூர்வமாக்க இராணுவத்தின் முயற்சியாக இந்த நடவடிக்கையை நிபுணர்கள் கருதுகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் இருப்பதால், ஜெனரல்களின் அதிகாரத்தை பலப்படுத்துவதற்காக தேர்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை