இலங்கை மின்சார சபையின் தலைவர் டாக்டர் திலக் சியம்பலாபிட்டிய தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார், அதை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக மின்சாரசபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவரது இராஜினாமா வெள்ளிக்கிழமை, மே 9 அன்று அமலுக்கு வந்தது, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி அவர் பதவி ஏற்றார்.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தலைவராக பணியாற்ற ஒப்புக்கொண்டதாகவும், பதவி விலகுவதற்கான தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டியதாகவும் டாக்டர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். “எனக்கு பல குடும்ப கடமைகள் உள்ளன. ஏற்கனவே மின்சாரசலபியில் மிகவும் திறமையான நிபுணர்கள் உள்ளனர், அவர்கள் பணியைத் தொடர்வார்கள்,” என்று அவர் கூறினார்.
செலவு-பிரதிபலிப்பு கட்டணத்தில் அரசியல் அதிகாரம் மற்றும் PUCSL இன் தேவையற்ற தலையீடு காரணமாக ராஜினாமா தூண்டப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்லன.