பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓடிய சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (18) மாலை 7 மணியளவில் நடந்தது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் எந்த இறப்புகளோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை, ஆனால் தேவாலயத்தின் ஜன்னல் சேதமடைந்துள்ளது.
தேவாலயத்தின் மதபோதகருடனான தனிப்பட்ட தகராறின் காரணமாகவே இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மன்னம்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.