Monday, February 24, 2025 12:38 am
நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த வருடம் நடத்திய சோதனைடின் பின்னர் தாக்கல் செய்யப்பாட்ட வழக்கில் பகுதியில்
பூகொட தங்கல்லவில் இயங்கிய பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், இலங்கை தரநிலை சின்னம் தவறாக அச்சிடப்பட்ட பிராண்ட் பெயரைக் கொண்ட குடிநீர் போத்தல்களை தயாரித்து சந்தையில் வெளியிட முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
SLS தரநிலை சின்னத்துடன் போலியாக தயாரிக்கப்பட்ட 6,800 குடிநீர்போத்தல்களை அழிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த நிறுவனத்திற்கும் அதனை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் முகாமையாளருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சந்தை மதிப்புள்ள குடிநீர் போத்தல்களை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் அழிக்க பூகொட நீதவான் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
கடந்த 20 ஆம் திகதி, சம்பந்தப்பட்ட குடிநீர் போத்தலில் இருந்து தண்ணீர் அகற்றப்பட்டு, வெற்று போத்தல்கள் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டன.

