பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பாக நள்ளிரவு சோதனையின் போது கடுவெல பொலிஸார் 21 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
பிரகாரம் கடுவெல, வெலிவிட்டவில் உள்ள ஒரு ஹோட்டலில், மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கஞ்சா ,போதை மாத்திரைகள் உட்பட பல சட்டவிரோத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 முதல் 27 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.