வெண்கரம் அமைப்பினால் பூநகரியில் கணினி தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
தேவை உடைய பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொடுப்பதனூடாக அவர்களை வேலை உலகிற்கு தயார்படுத்தும் இலக்குடன் இத் தொழிற்பயிற்சி நிலையம் பூநகரி பிரதேசசபை பொது நூலக அனுசரனையுடன் வெண்கரம் அமைப்பினால் உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பூநகரி பிரதேசசபை பொதுநூலக நூலகர் திரு தி.செல்வக்குமார் தலைமையில் பூநகரி நூலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தேவையுடைய பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக அவர்களது வாழ்வியலை கட்டியெழுப்புவதை இலக்காக கொண்டு செயற்படும் வெண்கரம் அமைப்பானது போருக்கு பின்னர் வரலாற்றின் முதற் தடவையாக பூநகரி பிரதேசத்தில் தேசிய தர மட்டதிலான சான்றிதழை வழங்கும் கணினி பயிற்சி செயற்றிடத்தை பூநகரி பிரதேச மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்த செயற்பாட்டை பெற்றோர்களும் பூநகரி பிரதேச மக்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக பூநகரி பிரதேச செயலக செயலாளர் தி.அகிலன்,பூநகரி பிரதேச சபை செயலாளர் இ. தயாபரன், வெண்கரம் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் திருமதி சுகுணராணி சண்முகேற்திரன், SOS தொழிற் பயிற்சி நிலைய இயக்குனர் ம.நந்தகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சுப நேரத்தில் பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்யப்பட்டு தமிழர் மரபுப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
SOS தொழிற்பயிற்சி நிலைய இயக்குநர் மாணவர்களுக்கான கணினி பயிற்சி நெறிகளை ஆரம்பித்து வைத்தார்.
வெண்கரம் செயற்பாட்டாளர் திரு.மு.கோமகனின் நோக்குரையை தொடர்ந்து பிரதம, சிறப்பு விருந்தினர்கள், கணினி பயிற்சி நெறி போதனாசிரியர், நூலக உதவியாளர்,வெண்கரம் செயற்பாட்டாளர்களது வாழ்த்துரைகளும் இடம்பெற்றது.