மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார்.
மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் 4 ஆம் திகதி நேர்முக பரீட்சைக்கு சென்ற போது நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நிதி நிறுவன முகாமையாளரை கைது செய்யப்பட்டார்.
நிதி முகாமையாளர் எதிராக பொலிஸார் வழக்கு தொடரப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) ழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது முகாமையாளருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் , தடய பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.
ஒரு குற்றசாட்டுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்குமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் நீதிபதி கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்
Trending
- வெளிநாட்டுக்குச் செல்கிறார் அனுர
- சிரிலியா-கார்ல்டன் பஸ் ஒப்பந்த விசாரணையை ஆரம்பித்தது சிஐடி
- 2026 ஆம் ஆண்டு பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியிடப்பட்டது
- மட்டக்களப்பு எம்பி ஞானமுத்து ஶ்ரீநேசன் விபத்தில் காயம்
- பாலியல் குற்றவாளிகு 10 வருட கடூழிய சிறை தண்டனை
- மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க 6 மணிநேரம் பயணம்
- ருமேனியாவுக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய விமானம்
- பாகிஸ்தானில் வெள்ளத்தில் 97 பேர் மரணம், 4.4 மில்லியன் மக்கள் பாதிப்பு