இங்கிலாந்து ,கனடா ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.மத்திய கிழக்கில் நீண்டகால அமைதிக்கு, பாலஸ்தீனம் ஒரு இறையாண்மை, ஜனநாயக மற்றும் சாத்தியமான நாடாக உருவாவது முக்கியம் என்று இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் இஸ்ரேலிய மக்களை பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டிய அதே நேரத்தில், இஸ்ரேல் காஸாவில் உள்ள மக்களை ஒடுக்குகிறது என்றும் விமர்சித்துள்ளது.
இந்த அங்கீகாரம், மத்திய கிழக்கில் அமைதி,பாதுகாப்புக்கான இரு அரசு தீர்வின் சாத்தியக்கூறுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கீட் ஸ்டார்மர், பாலஸ்தீனத்தை பிரிட்டன் அங்கீகரித்ததை வீடியோ உரையில் அறிவித்தார்.
மத்திய கிழக்கில் அமைதி ,இரு அரசு தீர்வின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறினார்.
“இஸ்ரேல் பாதுகாப்பாக இருப்பதோடு, ஒரு சாத்தியமான பாலஸ்தீன அரசுடன் இணைந்து இருப்பதும் அவசியம். ஆனால், தற்போது நம்மிடம் இரண்டும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அங்கீகாரம், சுயநிர்ணயம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளின் கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதாகவும், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகவும் இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு