சிங்கப்பூரில் உள்ள பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய தமிழக இளைஞர்கள் 3 பேர் உள்பட 4 பேரை ஹீரோக்களாக அங்கீகரித்த சிங்கப்பூர் அரசு, சமூக உயிர்காக்கும் விருது வழங்கி கௌரவித்தது.
] திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லகம் கிராமத்தை சேர்ந்த சரண் ராஜ் (33), தஞ்சை பட்டுக்கோட்டை எட்டுப்புளிக்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன், புதுக்கோட்டை அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ், பஞ்சாப்பை சேர்ந்த இந்தர்சிங் ஆகிய 4 பேருக்கு விருது வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகள் வளப்படுத்தும் மையம், நியூட்டன்ஷோ கேம்ப் மற்றும் பள்ளி உள்பட 3 மாடி கட்டிடத்தில் நடந்த இந்த விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அதன் அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லகம் கிராமத்தை சேர்ந்த சரண் ராஜ் (33), தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை எட்டுப்புளிக்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ், பஞ்சாப்பை சேர்ந்த இந்தர்சிங் ஆகிய 4 பேர் உள்பட 18 பேர் உடனடியாக விரைந்து செயல்பட்டடனர்.
அவர்கள் தங்களது உயிரை பயணம் வைத்து, தீ விபத்தில் சிக்கிய 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றினார்கள். இதையடுத்து சிங்கப்பூர் நாட்டின் குடிமைத் தற்காப்புப் படை விருது வழங்கி
Trending
- நுரையீரலின் செயற்திறனை அதிகரிக்கும் சுவாச பயிற்சிகள்
- டெங்கு நோயாளர் தொகை 6,000 ஐ தாண்டியுள்ளது
- புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த இந்தியாவின் ஒப்புதல் தேவை
- குருணாகலில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
- கோலிக்கு எதிராக பொலிஸில் புகார்
- காட்டுத்தீயின் புகையால் காற்றின் தரம் மோசமாகிறது
- கென்யாவில் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினம்
- இந்தியாவின் உதவியுடன் ஊர்காவற்துறையில் வழங்கப்பட்ட வலைகளும் உலர் உணவு பொருட்களும்