கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகளை ஒப்படைப்பது மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படும் என்று ஹமாஸ் திங்களன்று அறிவித்ததை அடுத்து, “காஸ பகுதியில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும்” தயாராக இருக்குமாறு இராணுவத்திற்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸின் அறிவிப்பை “காஸா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை முழுமையாக மீறுவதாக” கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காஸாவில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும் மிக உயர்ந்த மட்டத்தில் தயார் நிலையில் இருக்கவும், என்கிளேவ் அருகே உள்ள சமூகங்களைப் பாதுகாக்கவும்” இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டதாக காட்ஸ் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் , பாதுகாப்பு அதிகாரிகளுடன் நிலைமை மதிப்பீட்டுக் கூட்டத்தை கூட்டுகிறார் என்று பிரதமர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி இஸ்ரேலின் Ynet செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது
Trending
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
- 24 மணி நேர கடவுச்சீட்டு சேவை நிறுத்தம்
- ஊழலற்ற மக்களாட்சியை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னம் வழங்கும்