கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகளை ஒப்படைப்பது மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படும் என்று ஹமாஸ் திங்களன்று அறிவித்ததை அடுத்து, “காஸ பகுதியில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும்” தயாராக இருக்குமாறு இராணுவத்திற்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸின் அறிவிப்பை “காஸா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை முழுமையாக மீறுவதாக” கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காஸாவில் எந்தவொரு சாத்தியமான சூழ்நிலைக்கும் மிக உயர்ந்த மட்டத்தில் தயார் நிலையில் இருக்கவும், என்கிளேவ் அருகே உள்ள சமூகங்களைப் பாதுகாக்கவும்” இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டதாக காட்ஸ் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் , பாதுகாப்பு அதிகாரிகளுடன் நிலைமை மதிப்பீட்டுக் கூட்டத்தை கூட்டுகிறார் என்று பிரதமர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி இஸ்ரேலின் Ynet செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது
Trending
- கமாஸ் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு, காசா மீது விமானத் தாக்குதல்
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்