தென் கொரியாவில் உள்ள புசானில் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஏ321 மொடல்ஏர் பூசன் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன்பு தீப்பிடித்தது, ஆனால் அதில் இருந்த 176 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் கொரிய விமான நிறுவனமான ஏர் புசான் இயக்கும் ஏர்பஸ் விமானம் ஹொன்கொங்குக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது தென்கிழக்கில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் அதன் பின் பாகங்கள் தீப்பிடித்ததாக போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்தின் 169 பயணிகள், ஆறு பணியாளர்கள், ஒரு பொறியாளர் இருந்தனர் அனைவ்ரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை