மே மாதத்தில் இலங்கையில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவு காட்டுகிறது.கடந்த மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் தரவு சுட்டிக்காட்டுகிறது, மார்ச் மாதத்தில் 3,766 நோயாளிகளும், ஏப்ரல் மாதத்தில் 5,166 நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனர்.பதிவாகியுள்ளன. கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளவர்கள் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இதுவரை 13 பேர் டெங்கால் மரணமானதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிவித்துள்ளது.பருவமழை தொடங்கும் போது டெங்கு பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
Trending
- பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார்!
- நிமல் லன்சாவிற்கு பிணை
- முதல் கத்தோலிக்க புனிதராக கார்லோ அகுடிஸ் அறிவிப்பு
- சட்டவிரோதமாக பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது
- செம்பியன் பற்று புனித யூதா ஆலய திருவிழா
- ஆப்கானிஸ்தானுக்கு சீனா நிவாரண உதவி
- அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தென் கொரியர்கள் நாடு திரும்புவார்கள்
- பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இஸ்ஸடீன் கடமையேற்பு