அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெக்சாஸில் உள்ள ஒரு பெண்கள் முகாமில் இருந்து 23 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது, கோடைக்கால முகாமில் இருந்த 700க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இரவு முழுவதும் சில மணி நேரத்தில் 10 25 சென்டிமீற்றர் கனமழை பெய்ததால், குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, அவசரகாலப் பணியாளர்கள் 237 பேரை மீட்டனர். அவர்களில் 167 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
14 ஹெலிகாப்டர்கள்,12 ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான அவசரகால பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி