தெற்கு ஜப்பானில் உள்ள தொலைதூர தீவுகளில் இருந்த குடியிருப்பாளர்கள் சமீபத்திய வாரங்களில் ஏற்பட்ட 1,600 நிலநடுக்கங்களால் வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் மேயர் தெரிவித்தார்.
5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகும், கடுமையாக பாதிக்கப்பட்ட அகுசேகி தீவில் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஜூன் 21 முதல் இடைவிடாமல் நிகழ்ந்த நில அதிர்வுகள் அப்பகுதிவாசிகளுக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்களில் பலர் தூக்கத்தை இழந்துள்ளனர். அகுசேகியில் வசிக்கும் 89 பேரில், 44 பேர் ஞாயிற்றுக்கிழமைக்குள் ககோசிமாவின் பிராந்திய மையத்திற்கு வெளியேறிவிட்டனர். மேலும் 15 பேர் அருகிலுள்ள மற்றொரு தீவை விட்டு வெளியேறினர் என குபோ ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜூன் 21 முதல், திங்கட்கிழமை அதிகாலை வரை (07), நில அதிர்வு வல்லுநர்கள் 1,582 நிலநடுக்கங்களின் திரள் என்று குறிப்பிடும் பகுதியை இந்தப் பகுதி அனுபவித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
நீருக்கடியில் எரிமலை மற்றும் மக்மாவின் ஓட்டம் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என நம்புவதாகவும் நடுக்கம் எவ்வளவு காலம் தொடரும் என்று அவர்களால் கணிக்க முடியாது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
“எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை எங்களால் கணிக்க முடியாது. இது எப்போது முடிவடையும் என்று எங்களால் பார்க்க முடியாது” என மேயர் குபோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுமார் 125 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த தீவுக்கூட்டம், பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது. உலகின் நிலநடுக்கங்களில் சுமார் 18 சதவீதத்தில் நிலநடுக்கங்களை ஏற்படுத்துகிறது.
ஒரு பெரிய நிலநடுக்கம் விரைவில் நிகழும் என்று சமூக ஊடகங்கள் பரப்பிய ஆதாரமற்ற அச்சங்கள் காரணமாக சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருவதைத் தவிர்த்து வருகின்றனர்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு