பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த பிறகு, காஸா பகுதியை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும் என்றும், அதை மீண்டும் அபிவிருத்தி செய்யும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மீள்குடியேற்ற நடைமுறையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த விவரங்களை வழங்காமல் ட்ரம்ப் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
“அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும், அதனுடன் நாங்களும் ஒரு வேலையைச் செய்வோம்,” “நாங்கள் அதை மேம்படுத்தப் போகிறோம், ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கப் போகிறோம், மேலும் இது முழு மத்திய கிழக்கு நாடுகளும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும்.”அந்த இடம் “உலக மக்களுக்கு” ஒரு வீடாக மாறக்கூடும் என்று அவர் கூறினார்.
இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், காசாவிற்கு ஒரு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.
Trending
- முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி
- சிறைக்கு செல்கிறார் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி!
- அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்கவும்
- ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு
- பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை இளஞ்சிவப்பு ஆடை அணிந்து வர தீர்மானம்
- இன்றைய ராசிபலன் – 21.10.2025
- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி