ஒரு புதிய வகை பிளாஸ்டிக்கை ஜப்பான் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது கடலில் போட்டால் சில மணி நேரங்களில் கரைந்துவிடும் தன்மை கொண்டது என்பதே இதன் சிறப்பாகும்.. கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் பெருகி வருவது மிகப் பெரிய சிக்கலாக மாறி பிளாஸ்டிக் மாசை ஏற்படுத்தி வரும் சூழலில் அதற்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும். இந்த மக்கும் பிளாஸ்டிக் குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே பரிசோதனை செய்து வருகின்றனர். டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய பிளாஸ்டிக், மிக விரைவாக உப்பு நீரில் கரையும் என்றும் இது வேறு எந்தவிதமான எச்சத்தையும் விட்டுச் செல்லாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்கும் வகையில் டோக்கியோவுக்கு அருகிலுள்ள வாகோ நகரில் உள்ள ஆய்வகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் உப்பு நீர் நிரப்பப்பட்ட ஒரு கேனில் சிறிய பிளாஸ்டிக் துண்டு போடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த பிளாஸ்டிக் மொத்தமாகக் கரைந்து மறைந்து போனது. இந்த கண்டுபிடிப்பை பிஸ்னஸாக எப்படி மாற்றுவது என்பது குறித்து எந்தவொரு திட்டமும் வகுக்கப்படவில்லை எனக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், பலரும் இதில் ஆர்வமாக இருப்பதால் ஆய்வுகளைத் தீவிரப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தனர்.
Trending
- தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
- ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா இன்று
- இவ்வாண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 50 பேர் உயிரிழப்பு
- 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
- யாழ். பல்கலை வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
- இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
- இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் அரிய வாய்ப்பு!
- வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் மீட்பு