மன்னார் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவு ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்தது. 1969ல் 20.85 ஹெக்டேராக இருந்தது. ஆனால் 2018ல் 5.97 ஹெக்டேராக சுருங்கியது. நிபுணர்களின் கூற்றுப்படி, கரியாச்சல்லி , கசுவாரி தீவுகள் 2035க்குள் மூழ்கிவிடுமாம். இந்நிலையில் கரியாச்சல்லி தீவை காப்பாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளது 50 கோடி ரூபாவில் புனரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்திருக்கிறது.
தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக கரியாச்சல்லி தீவை காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி உள்ளது.
முன்னதாக இதேபோல் சிக்கலை எதிர்கொண்ட வான் தீவு வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான கடலடிப்பவளப்பாறைகள் பரப்பை அதிகரித்து, சுற்றியுள்ள நீரை ஆழமற்றதாக்கி, வண்டல் குவிப்பை அதிகரித்திருந்தது. இதனால் அங்கு 37-க்கும் அதிகமான துணை மற்றும் பெரிய பவளப்பாறைகளில் வாழும் கடல்வாழ் இனங்கள் பெருகின.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் ஆரம்பம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு. ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்