மேற்கு வங்காளத்தின் துர்காபூர் விரைவுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் கங்குலியின் கார் விபத்தில் சிக்கியது.
தண்டன்பூரில் நடந்த இந்த சம்பவம், கங்குலியின் வாகன கான்வாயை ஒரு லாரி திடீரென முந்திச் சென்றதால், ஓட்டுநர் திடீரென பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதனால், கங்குலியின் வாகனத்தின் பின்னால் இருந்த கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன, அவற்றில் ஒன்று கங்குலியின் காரை மோதியது.அதிர்ஷ்டவசமாக, விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், கங்குலியின் பாதுகாப்புக்காகச் சென்ற இரண்டு கார்கள் சிறிய அளவில் சேதமடைந்தன.
விபத்தினால், சௌரவ் கங்குலி பர்த்வான் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு சுமார் 10 நிமிடங்கள் சாலையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும் மாற்று ஏற்பட்டவுடன், அங்கு அவர் விழாவில் கலந்து கொண்டார்.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் ஆரம்பம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு. ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்