ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சட்டமா அதிபர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்யும் நான்கு அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான விசாரணையின் போது, சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நேற்று புதன்கிழ்மை [5] நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சட்டம் இயற்றப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்று வாதிடுகின்றன.
நடவடிக்கைகளின் போது, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
முந்தைய அரசாங்கம் திருத்தங்களைத் தொடங்கியிருந்தாலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த செயல்முறை நிறுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு