நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 79வது அமர்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, செப்டம்பர் 24ஆம் திகதி புதன்கிழமைஉரையாற்றுவார்.
ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர் பட்டியலின்படி, செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறும் பொது விவாதத்தின் பிற்பகல் அமர்வில் ஜனாதிபதி அனுர பேச பட்டியலிடப்பட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையில் அரச தலைவராக தனது முதல் உரையில், இனாதிபதி க, இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகள் மற்றும் காலநிலை நடவடிக்கை, நிலையான வளர்ச்சி , சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 பொது விவாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தலைவர் வகுத்த கருப்பொருளின் கீழ் அமெரிக்கா, சீனா, இந்தியா,பிறேஸில் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அறிக்கைகளை வழங்குவார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, உலக அமைப்பில் இலங்கை நிகழ்த்தும் முதல் உரையாக அவரது உரை இருக்கும்.