இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும்கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி எச்சரித்துள்ளார்.
15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் மருத்துவ நிபுணர் கூறினார்.
வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி மேலும் தெரிவிக்கையில்,
“குறிப்பாக பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி.யைப் பொறுத்தவரை, இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.பல இளைஞர்கள் இந்த சமூக ஊடகங்கள் மூலம் கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கின்றனர்.
சிலர் மது ,போதைப்பொருள் பயன்பாட்டை நாடியுள்ளனர். இது போன்ற காரணங்களால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன” என்றார்.
Trending
- மெலிந்த குழந்தையை காப்பாற்ற போராடும் தாய்
- ஜேர்மனியில் 18 பேரை கத்தியால் குத்திய பெண்
- முதியவரின் வயிற்றில் 8 ஆயிரம் கற்கள்
- ட்ரம்புக்கு எதிராக வழக்கு தாக்கல்
- இலங்கைக்கு ஜேர்மனி கொடுக்கப்போகும் அழுத்தம்
- மாலினி பொன்சேகா காலமானார்
- முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
- கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்