இலங்கையின் 53ஆவது குடியரசு தினம் மே 22ஆம் திகதியான இன்றைய தினம் கொண்டாப்படுகிறது.
பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 வருடங்கள் நிறைவடைகிறது.
1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதும், அது முழு சுதந்திரமாக இருக்கவில்லை.
1815 ஆம் ஆண்டு, கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரித்தானிய பேரரசுடன் இணைக்கப்பட்டது.
அன்றிலிருந்து, நாட்டின் மீதான இறையாண்மை பிரித்தானிய பேரரசிடம் மாற்றப்பட்டது.
இந்நிலையில், 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி இலங்கை சோல்பரி யாப்பு முறையில் இருந்து விடுபட்டு, புதிய அரசியலமைப்பை உருவாக்கியது.
1972ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், இலங்கையை டொமினியன் அந்தஸ்தில் இருந்து நீக்கி சுதந்திர குடியரசாக மே மாதம் 22ஆம் திகதி பிரகடனப்படுத்தியது.
அதற்கமைய, பிரித்தானிய காலனியாக இருந்த இலங்கை முழு சுதந்திரம் பெற்ற நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.