பாகிஸ்தானின் இராணுவ தளபதி அசிம் முனீர் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை சந்திக்க உள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரமாக கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை அமெரிக்க அதிபர் சந்திக்க இருப்பது சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஈரான் – இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படலம் என்றும் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த 14 ஆம் திகதி இராணுவ ஆண்டு விழா நடைபெற்றது. பாகிஸ்தான் தளபதி சந்திப்பு இதில் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிம் முனிர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது. இதை வெள்ளை மாளிகை மறுத்தது. இந்த நிலையில், தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி இன்று அமெரிக்க ட்ரம்பை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாஷிங்டன் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ட்ரம்புடன் மதிய உணவு விருந்தில் பங்கேற்கும் அசிம் முனிர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
அமெரிக்க வெளியுறவு செயலர் , பாதுகாப்புத்துறை செயலர் ஆகியோரை முனிர் சந்தித்து பேச உள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் பாகிஸ்தானிய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இம்ரான் கானின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். ஆசிம் முனிருக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் நுழைய முயன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அமெரிக்க செல்வது இது முதல் முறையாகும்.