ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, பதிலளித்தவர்களில் 52% பேர் உக்ரைனை ‘தனிப்பட்ட முறையில் ஆதரிப்பதாகக்’ கூறுகிறது
வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் டொனால்ட் ட்ரம்ப் ,ஜெலென்ஸ்கி ஆகியோருக்கிடையேயான இராஜதந்திர முறிவிற்கு முன்னர் நடத்தப்பட்ட அமெரிக்க கருத்துக் கணிப்பில் , 2022 உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு, கணக்கெடுக்கப்பட்ட அமெரிக்கர்களில் 4% பேர் மட்டுமே ரஷ்யாவை ஆதரிப்பதாகக் கண்டறிந்துள்ளது – ஆனால் 44% பேரில் ஒரு பெரும் சிறுபான்மையினர் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டை ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பெப்ரவரி 26 ஆம் திகதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் , ஒப்பீட்டளவில் 52% பேர் – உக்ரைனை “தனிப்பட்ட முறையில் ஆதரிப்பதாக” கூறியுள்ளனர்.
ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சியினரிடையே ரஷ்யாவிற்கு அதிகபட்ச ஆதரவு 7% ஆக இருந்தது. அந்த குடியரசுக் கட்சியினரில் 56% பேர் இந்த இரண்டில் எதுவுமே தங்களுக்கு இல்லை என்றும், 37% பேர் உக்ரைனை ஆதரித்ததாகவும் தெரிவித்தனர் .
ஒட்டுமொத்தமாக – ட்ரம்பின் நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் உக்ரைனுக்கு சாதகமாக இருப்பதாக 11% பேர் நம்புவதாகவும், 46% பேர் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது .
Trending
- இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் 60 பேர் பலி
- உலக டெஸ்ட் சம்பியன் வரலாற்றுச் சாதனை படைத்தது தென் ஆப்ரிக்கா
- இலங்கையில் துருக்கிய கடற்படைக் கப்பல்
- சிறைச்சாலை ஆணையாளர்களின் சொத்துக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
- சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்தது ஜேவிபி தூதுக்குழு
- 8,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.
- காங்கேசன்துறை பொலிஸுக்கு மிரட்டல்
- எச்சரிக்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்